கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருமண தகவல் மையம் — பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களை இணைக்கும் நம்பகமான திருத்தல சேவை.
பாளையங்கோட்டை மறைமாவட்டம் கோவில்பட்டி பங்கு புனித சூசையப்பர் ஆலயத்தின் கீழ் இயங்கும் இச்சேவை, கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் தங்களுக்குரிய தகுதியான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க நல்வழிகாட்டுகிறது.
புனித திருமணத்தை மதிக்கின்ற கத்தோலிக்க குடும்பங்களின் நம்பிக்கைக்குரிய ஆலயமாக விளங்குகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் விழுமியங்களின்படி, தூத்துக்குடி மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்ட வரன்கள் மட்டுமே பதியப்படுகிறது.
ஒவ்வொரு வரனும் பங்குத்தந்தையின் பரிந்துரைக்கடிதத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டு முறையாகப் பதிவு செய்யப்படுகிறது.
குடும்பங்களின் கௌரவமும் பெண்களின் புகைப்பட பாதுகாப்பும் முழுமையாக திருச்சபையின் மேற்பார்வையில் பாதுகாக்கப்படுகிறது.
ஆலய வளாகத்திலேயே திருமண தகவல் அலுவலகம் இயங்குவதால் நேரில் வந்து ஆலோசனைகளையும் விபரங்களையும் பெறலாம்.
4 எளிய படிகளில் தங்களின் இல்லற வாழ்வை தொடங்குங்கள்
வரனின் அடிப்படை தகவல்கள் மற்றும் கல்வி, பணி விபரங்களை இணையதளம் அல்லது ஆலய அலுவலகத்தில் பதிவு செய்தல்.
தங்கள் பங்குத்தந்தையின் பரிந்துரைக்கடிதத்தை சமர்ப்பித்து திருச்சபையின் நிர்வாகத்தால் சரிபார்த்தல்.
அங்கீகரிக்கப்பட்ட வரன்களைக் கண்டறிந்து இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்திற்கு உடன்படுதல்.
இறைவனின் திருமுன்னிலையில் ஆலய பீடத்தில் ஆசீர்வதிக்கப்பட்டு இல்லற வாழ்வு தொடங்குதல்.
"This is My commandment, that you love one another, just as I have loved you."
"ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாயிருக்கிறது."
வரன் பதிவு மற்றும் சந்தேகங்களுக்கு கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருமண தகவல் மையத்தை தொடர்பு கொள்ளவும்.